கவிதை




நீ

பிரிந்து போன

ஒரு மழைநாளில் தான்

நான்

வர்ணங்களைத் தொலைத்த

வானவில் ஆனேன்.

நட்பு (உரையாடல் சிறுகதைப் போட்டிக்கு...)

இந்தக் கதை, மெரினாவில் ஒரு மதிய நேரம் இரண்டு சின்னப் பையன்கள் சந்திப்பதைப் பற்றியது. கதையை அவர்களே சொல்லட்டும். கடைசியில் தேவைப்பட்டால் மட்டும் நான் வருகிறேன்.



கார்த்திக்



அங்கே உட்கார்ந்திருப்பது உன்னிதான் என்று தெரிந்தவுடன் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மத்தியான வெயிலில், கடலைப் பார்த்துக் கொண்டு, மெரினாவில், தனியாக உட்கார்ந்திருந்தான். அந்த ஆகஸ்ட் மாத மதியத்தில் ஆங்காங்கே அம்ர்ந்திருந்த 'காதல்பறவைகள்' தவிர கடற்கரை வெறுமையாக இருந்தது.

இன்று காலேஜ் லீவ். காலையில் திருவல்லிக்கேணியில் இருக்கும் என் நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன். ஹாஸ்டல் சாப்பாடு மகாகொடுமை என்பதால், நண்பர்களின் அம்மாக்கள் வாய்தவறி அழைத்துவிட்டால் கூட கிளம்பிப் போய்விடுவது என் வழக்கம். மதியம் சாப்பிட்டுவிட்டு மெரினாவில் காலை நனைத்துவிட்டு திரும்புகையில்தான் உன்னியைப் பார்த்தேன்.

என் நண்பன் பைக்கை எடுக்க, "நான் பஸ்ஸில் போயிக்கிறேன்," என்று அவனை அனுப்பி வைத்தேன். திரும்பிப் பார்த்தபோது, தூரத்தில் உன்னி இன்னும் உட்கார்ந்திருந்தான். இவனுக்கு என்ன ஆயிற்று?

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.



உன்னி


எவ்வளவு நேரமாக இப்படிக் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால், என் மனதுக்குள்ளும் இந்த அலைகளைப் போல வெவ்வேறு எண்ணங்கள் வந்து மோதியவாறே இருக்கின்றன. அடக்க முயற்சிக்கும் போதெல்லாம், மேலும் பலங்கொண்டு சுனாமி போல் மீண்டும் வந்து மோதுகின்றன. தாங்கவே முடியாத சத்தம்!

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?



கார்த்திக்



செருப்புக்குள் புகுந்த மணல் காலைச் சுட, உன்னியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மூன்று மாதமாக நானும் அவனும் ஒரே க்ளாஸில்தான் - பிஎஸ்ஸி பிஸிக்ஸ் முதல் வருஷம் - படிக்கிறோம் என்றாலும் நானும் அவனும் நண்பர்கள் அல்ல.

ஓரிருமுறைதான் பேசியிருக்கிறோம். என்னைப் போலல்லாமல் நன்றாகப் படிக்கிற பையன். அவ்வப்போது ப்ரேக்கில் ப்ரஃபஸர்களுடன் காபி சாப்பிடுவான். ரொம்ப நல்ல பையன்.

ஆனால் இந்த ஒருவாரமாக ஏதோ பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. சரியாக க்ளாஸிற்கு வருவதில்லை. இப்படி தனியாக ஆங்காங்கே உட்கார்ந்திருக்கிறான். காலேஜ் லைப்ரரியில், ஹாஸ்டல் மொட்டை மாடியில், நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில், பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இப்போது இங்கே மெரினாவில்.

என்னதான் நடக்கிறது?



உன்னி



என் அப்பாவுக்கும், அம்மாவுக்குமான சண்டை போல என்னைக் கஷ்டப்படுத்துவது வேறெதுவும் இல்லை. அப்பாவும், அம்மாவும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். ஆனால் 20 வருடங்கள் கழித்து இன்று அவர்கள் காதலிப்பது அவர்களின் வேலைகளை மட்டுமே.

அப்பாவுக்கு அவர் பிஸினஸ் முக்கியம். அப்பா கொச்சினில் ஒரு பிஸினஸ்மேன். அம்மாவுக்கு அவங்க வேலை பார்க்கும் ஸ்கூல் முக்கியம். அம்மா பிரின்சிபல். நான் ஒருவன் மட்டும் இல்லாவிட்டால் டைவர்ஸ் வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருப்பார்களோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

ஒன்றாக சாப்பிடும் இரவுநேர சாப்பாட்டு மேசை ஒரு நரகம். அப்போது நிலவும் அமைதியில் ஒரு பெரும் சண்டைக்கான வாய்ப்புகள் எப்போதும் ஒளிந்திருக்கும். பாத்திரங்கள் கிளிங்கும் ஒலிகளுக்கு பயப்பட்டிருக்கிறீர்களா நீங்கள்?

இவர்கள் இங்கிலீஷில் சண்டை போட்டுக் கொள்ளும்போது, என் அறைக்குள் டிவி ஓடிக்கொண்டிருக்கும். காது கிழியும் சத்தத்துடன்.



கார்த்திக்



உன்னி ஒருவேளை வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுகிறான் என்று நினைக்கிறேன். ஹோம்சிக்னஸ். 17 வருடங்கள் வீடு, அம்மா, அப்பா என்று இருந்துவிட்டு, திடீரென்று ஒருநாள் காலேஜ், ஹாஸ்டல் என்று வெளியே வரும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். எனக்கு அப்படி இல்லை என்பது வேறு விஷயம். இப்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கிறேன்.

காலேஜில் சேர்ந்தபோது, உன்னியின் அப்பா, அம்மாவை நான் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். Such a lovely couple! அவ்வளவு டீசன்ட். அவ்வளவு ஃப்ரெண்ட்லி. உன்னி ரொம்ப லக்கி!

அவர்களை மிஸ் பண்ணுவது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக ஒருவாரம் க்ளாஸிற்கு கூட வராமல் அங்கங்கே இப்படி தனியாக உட்கார்ந்திருப்பானா? அதுவும் இப்போது மெரினாவில், மொட்டை வெயிலில்? வேறு எதாவது பிரச்சனை இருக்குமோ?




உன்னி



எங்கே இவர்கள் சண்டையில் நான் பைத்தியமாகி விடுவேனோ என்றுதான், ஸ்கூல் முடித்ததும் சென்னை வந்து பிஎஸ்ஸி சேர்ந்தேன். போனவாரம் முதல் இன்டர்னல் டெஸ்ட் நடந்தது. எல்லோருக்கும் வீட்டிலிருந்து போன் பண்ணி வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அம்மாவுக்கு போன் செய்தேன்.

இப்போது அம்மா என் ரூமை எடுத்துக் கொண்டார்களாம். ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்கிறார்களாம். கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதாம். சே!

எக்ஸாம் எழுதப் போகவே பிடிக்கவில்லை. என் க்ளாஸ்மேட் கார்த்திக் வந்து 'ஆல் த பெஸ்ட்' சொன்னான். என்னால் பதிலுக்குக் கூட சொல்ல முடியவில்லை.



கார்த்திக்



உன்னி ஒரு இன்ட்ரோவர்ட். எப்போதும் தனியாகவே இருக்கிறான். க்ளாஸில் இருக்கும் மலையாள கேங்கிலும் அவன் இல்லை. நான் போய்ப் பேசிய ஓரிருமுறையும் எனக்கு பதில் மட்டும்தான் சொன்னான்.

போனவாரம் நடந்த இன்டர்னல் எக்ஸாமில் 10 நிமிடத்தில் எழுந்து போய்விட்டான். ஏதோ பிரச்சனையை மனதுக்குள் போட்டு குழப்பிக் கொள்கிறானா? லவ் ஃபெயிலியர்? ஹ்ம், காலேஜில் பொண்ணுங்களே கிடையாது. PG படிக்கும் அக்காக்களோடு சரி. அவர்களிலும் .... ச்சீ, என் புத்தி ஏன் இப்படி போகிறது?

இதோ உன்னியை நெருங்கிவிட்டேன். அவனிடம் போய் என்ன கேட்பது என்று தெரியவில்லை. திரும்பிப் போய்விடலாமா?



உன்னி



இவர்கள் சண்டை என்மீது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இவர்களுக்கு தெரியாதா? மனம் ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. எப்போதும் ஒரு மோசமான நிலையை கற்பனை செய்து, அது நடந்துவிடுமோ என்று அலைபாய்கிறது. அந்த பயத்திலேயே வாழ வேண்டியிருக்கிறது.

இதே மனநிலையில் தொடர்ந்து இருந்தால் எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று தோன்றுகிறது. எங்கேயாவது ஓடிப் போய்விடலாம் போய்விடலாம் போலிருக்கிறது.



*****



உன்னியை நெருங்கிய கார்த்திக், அவன் பக்கத்தில், மணலில், முட்டி போட்டு உட்கார்ந்தான். உன்னியின் தோளை லேசாகத் தொட்டான்.

"ஹாய்!"

உன்னி திரும்பினான். அங்கே கார்த்திக்கைப் பார்த்த உன்னிக்கு ஆச்சர்யம். கலங்கிய கண்களுடன் இருக்கும் உன்னியைப் பார்த்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சி.

"ஹேய் டூட், வாட் ஹாப்பன்ட்?"

கார்த்திக் உன்னியின் தோள்களை பிடித்தான். உன்னியின் ஒரு கண்ணில் மட்டும் கண்ணீர் வழிந்தது.

"ஹேய், யு கேன் டெல் மி.. ஏஸ் எ ஃப்ரண்ட்.. வாட் ஹாப்பன்ட்? வாட்ஸ் த ப்ராப்ளம்?"

உன்னி கார்த்திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"யு மிஸ் யுவர் ஹோம் வெரி பேட்லி?"

கார்த்திக்கின் தோள்களில் சாய்ந்த உன்னி, அழ ஆரம்பித்தான்.



*****


(உரையாடல் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட கதை)

ஜூனியர்ஸ்

நான் பதிவு எழுதத் தொடங்கிய காலங்களில் - சென்னை வந்த புதிதில் - வீக் என்ட் பதிவுகள் எழுதினேன். அவற்றுக்கு நல்ல வரவேற்பிருந்தது என்று சொல்ல ஆசைதான். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள் அவை. கார்க்கி கூட அவர் ப்ளாக்கில் ஒன்றை பப்ளிஷ் பண்ணினார்.

அதற்குப் பிறகு எனது வீக் என்ட்கள் பற்றி எழுதாதற்கு பல காரணங்கள். இப்போது மறுபடியும் எழுதலாமே என்று தோன்றியது. அதான்.

*****

போன வீக் என்ட் எனது மிகவும் போரான வீக் என்ட்களில் ஒன்று.
இரண்டு நாளில் ஒரே ஒருமுறைதான் வீட்டை விட்டு வெளியே போனேன்.

அதுவும், இட்லி பொடி வாங்க பத்தடி தொலைவில் இருக்கும் மளிகைக் கடைக்கு போனேன். வாழைப்பழம் கேட்டதற்கு 4 ரூ என்றார். இதுக்கும் ஐடி பசங்கதான் காரணம் என்று யாராவது சொல்வார்களா தெரியவில்லை. ;)

கால நேரம் பார்க்காமல், காலை பகல் இரவு என்று எந்த பாரபட்சமும் இல்லாமல், கன்னாபின்னவென்று காட்டுத்தனமாக தூங்கிய வீக் என்ட்டில் உங்களுக்கு சொல்ல ஒன்றும் இல்லை.

ஆனால், ரெண்டு நாளை வீட்டுக்குள்ளேயே கழிக்க முடியுமா என்று கண்களை அகல விரிப்பவர்களுக்கு என் பதில், முடியும்.

*****

இது காலேஜ் ரீ ஓபனிங் டைம். ஸோ, நிறைய புது பசங்க காலேஜ் வருவாங்க. அவங்களுக்கு காலேஜ் பற்றி நிறைய சந்தேகங்கள், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால் ஃபேஸ்புக், ஆர்குட், மிங்கிள் பாக்ஸ், ... எல்லாவற்றிலும் அவங்க காலேஜின் குரூப்பில் சேர்ந்து, தன்னோட பல சந்தேகங்களையும், எதிர்பார்ப்புகளையும் சொல்லிட்டிருப்பாங்க.

அதையெல்லாம் படிக்கவே தமாஷாக இருக்கும். 'Proud to be a Loyolite', 'Proud to be an MCCian' என்று அவங்க அவங்க காலேஜ்க்கு ஏத்த மாதிரி சொல்லிட்டு இருப்பாங்க. நமக்குதானே தெரியும் காலேஜ் எப்படி இருக்கும்னு. ஸோ, படிக்க படிக்க செம காமெடியா இருக்கும்.

அப்புறம் சந்தேகங்கள். இதுவும் காமெடிதான்னாலும் இதுக்கு பொறுப்பா பதில் சொல்லத் தோணும்.

கேமரா செல்போன் வெச்சுக்கக்கூடாதா? (வெச்சுக்கலாம். ஆனால் வெளியே தெரியக் கூடாது.)

கேண்டீன்ல சாப்பாடு நல்லா இருக்குமா? (நல்லாதான் இருக்கும். பார்க்கிறதுக்கு.)

காலேஜ் ஸ்ட்ரிக்டாமே? (சேச்சே, ஜெயிலைவிட மோசமா இருக்காது.)

இது மட்டும் இல்லை. 'நான் நல்லா இன்ஸ்விங் போடுவேன். காலேஜ் கிரிக்கெட் டீம் எப்படி'ங்கிறதுல இருந்து 'நான் முடியை கலரிங் பண்ணிக்கலாம்னு இருக்கேன். ஒன்ணும் பிரச்சனையில்லையே'ங்கிறது வரைக்கும் நம்ம பசங்க கேட்கிற கேள்விகள் செம ஜாலியாக இருக்கும்.

ஆனால் ஒரு கேள்விக்கு ஒழுங்கா, பொறுப்பா பதில் சொல்லிப்பாருங்க. 10 நிமிஷத்தில் அஞ்சு ப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரும். ரொம்ப நல்ல பசங்க. போன வருஷம் நாமும் இதைத்தானே பண்ணினோம்.

அறிமுகப்படுத்திக்கிற பக்கத்தில் எவ்வளவு பசங்க(?) உங்க காலேஜ்ல சேர்ந்திருக்காங்கன்னு பார்த்துக்கலாம். ;)

*****

போன வருஷம் நாமும் இதே நிலையில்தான் இருந்தோம் என்று ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். திடீரென்று பெரிய பையன் ஆகிவிட்டது போல் ஃபீல் பண்ணலாம். இனிமேலும் நாம் விளையாட்டு பையனில்லை என்று கடைசியாக உணர்ந்து CAT கோச்சிங் க்ளாஸில் சேரலாம். :)

ஸோ, என்னோட போன வீக் என்ட் இப்படித்தான் வீட்டுக்குள் கழிந்தது. இப்போது வேலை பார்க்க வேண்டிய நேரம்.

See you guys!

ரெயின்போ தாட்ஸ்


(Thanks : The Hindu - Metro Plus)


போட்டோவில் இருப்பவர் உலகின் மிகவும் போட்டோஜெனிக்கான போட்டோகிராபர் மாதிரி தெரியுதில்ல? தல Rocks!!

*****

கடைசியில், செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' ரெடியாகிவிட்டது. ஸ்டில்ஸ் எல்லாம் மிரட்டலாகத்தான் இருக்கிறது. ஜூன் 14 ஆடியோ ரிலீஸாம். ஜீ.வி.பிரகாஷ் என்ன பண்ணியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

அது என்ன எனக்கு பிடித்த இயக்குநர்கள் மட்டும் இப்படி லேட் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. கௌதம், செல்வராகவன், மணிரத்னம், ...

*****

நேற்று இரவு வழக்கம்போல் சைதாப்பேட் ரயில்வே ஸ்டேஷனில் Appy Fizz ஐ உறிஞ்சிக் கொண்டு நின்றிருந்தேன். ரயில் வந்தது. நான் ஏறப்போனேன். அப்போது பெண்கள் கம்பார்ட்மென்டில் போய் சிலர் ஏறினார்கள்.

மணி 11. கம்பார்ட்மென்ட் காலியாக இருந்தது. எல்லாம் ஓகே! ஆனாலும் ஏன் என்று புரியவில்லை.

இப்படி நம் விநோதமான பழக்க வழக்கங்களை லிஸ்ட் எடுத்தால் இன்டெரெஸ்டிங்கா இருக்கும்னு நினைக்கிறேன். பணத்தில் காதல் வாசங்களை எழுதுவதுகூட அதில் ஒன்று. :)

*****

காலேஜ் எல்லாம் திறக்கப் போகிறார்கள். பல நாட்களாக பார்க்காமல் இருந்த ப்ரெண்ட்ஸ் எல்லோரையும் பார்க்கலாம்ங்கிற நினைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சீரியஸாவே காலேஜ் போலாம்னு தோணுது. மொக்கை லெக்சர்களில் போய் உட்காரலாம்னு தோணுது. ஒரு மாசமா வெட்டியா இருந்துட்டதால கொஞ்சமாவது வேலை செய்வோம்னு தோணுது.

ரெண்டு நாளுக்கு முன்னாடி நம்ம கார்க்கியின் ஸ்டேட்ட்ஸ் மெஸேஜ் 'நான் வேலை செய்யப் போறேனே!'. :)

*****

காலேஜ் திறக்கறாங்கன்னா ப்ரெண்ட்ஸ் மட்டும் வரமாட்டாங்க. நிறைய பொண்ணுங்க வருவாங்க. பிஸிக்க்ஸ் மேஜர்ஸுக்கான 'பிக்கப் லைன்'னு என் ப்ரெண்ட் மெயில் அனுப்பியிருக்கான். அவற்றை இங்கே பப்ளிஷ் பண்ணி வாங்கிக் கட்டிக் கொள்ள நான் தயாராக இல்லை. வேணும்னா நீங்களே Bing ல் தேடிக் கொள்ளுங்கள். :)

ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன். பிஸிக்ஸ் படிக்கிறதால் எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கு இனியாவது புரியலாம்.

I swear, I am not a Physics Major. Shall we?

*****

டெம்ப்ளேட் போரடிக்குதுன்னு புது டெம்ப்ளேட் மாத்தியிருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

தனிமையின் விலை - 4

தனிமையின் விலை - 1

தனிமையின் விலை -2

தனிமையின் விலை -3

*****

நம்ம லொள்ளு கார்த்திக் என்னை இந்தத் தொடர்பதிவின் இறுதிப்பாகத்தை படிக்க ஆவலாக இருப்பதாகச் சொல்லி எழுதச் சொன்னார். அவருக்கு நன்றி. இன்னொருவர் இந்தத் தொடர்பதிவை மறந்துவிட்டார். அவருக்கு _______. :)

*****

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தங்கள் என்னை அதிர்க்க, கண்களை திறக்க முயற்சி செய்தேன்.

என் பார்வை மங்கலாகாவும், என் நினைவுகள் நிலையற்றும் இருந்தாலும் என்னால் நடப்பதை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

Alley யின் இரு புறங்களிலும் வந்து நின்ற கார்களில் இருந்து இறங்கிய சிலர், என்னிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டு நடந்த இருவரையும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.

Suddenly there was a chaos!

துப்பாக்கி சத்தங்கள்.. தபதபவென ஓடும் சத்தம்.. கார் கண்ணாடிகள் உடைந்து சிதறும் சத்தம்.. கத்தல்கள்.. அலறல்கள்..

ஏற்கனவே பேரதிச்சியில் இருந்த நான் கண்களை மூடிக்கொண்டேன்.

10 நிமிடங்களில் அமைதி. முழு அமைதி. நான் கண்களை திறந்தேன். இரு கார்களும் திடீரென்று கிளம்பி மறைந்தன.

எனக்கு சற்று தொலைவில் என்னை ப்ளாக்மெயில் செய்து பணத்தை பிடுங்கிச் சென்றவர்கள் பிணமாகக் கிடந்தார்கள். அங்கே என் பணமும் ப்ரீப்ஃகேஸில் கிடந்தது.

நான் தடுமாறியபடி எழுந்து நின்றேன்.

*****

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வரும்போது இங்கே சொன்ன பொய்யையே நந்தினியிடமும் சொல்லிவிட முடிவு செய்தேன்.

'இது ஒண்ணுமில்ல. ஆஃபிஸ்ல படிக்கட்டில் தவறி விழுந்துட்டேன்!'

*****

எனக்கு இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர ஒரு வாரம் ஆகியது. நந்தினி உதவி செய்தாள். ஆனால் சினிமா ஹீரோயின் போல பக்கத்தில் இருந்து எனக்கு டேப்ளட்ஸ் எல்லாம் எடுத்து கொடுக்கவில்லை. நானும் எதிர்பார்க்கவில்லை. :)

*****

நியுயார்க்கில் எனது கடைசி நாள். பேக் செய்ய வேண்டியவை எல்லாம் பேக் செய்யப்பட்டுவிட்டது. நந்தினியுடன் எனது கடைசி நாள்.

என் மார்பின்மேல் கிடந்த அவள் பாதத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அதை முத்தமிட்டுவிட்டு எழுந்தேன். என் துணிகளை தேடினேன். அவை படுக்கையின் அந்தப்பக்கம் கிடந்தன. நடக்க சோம்பலாக அப்படியே பக்கத்தில் இருந்த சேரில் விழுந்து சிகரெட்டை வாயில் பொருந்தினேன்.

நியுயார்க்கில் எனது கடைசி நாள். நந்தினியுடன் எனது கடைசி நாள்.

சிகரெட்டை பற்றவைக்க தோன்றவில்லை. யோசிக்க ஆரம்பித்தேன்.

என்ன செய்திருக்கிறேன்? இது என் மனைவிக்கு துரோகமா? நான் நல்லவன் என்றே எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். இப்போது?

நந்தினிக்கு நான் செய்திருப்பது என்ன? அவள் என்னைப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ?

நந்தினி இன்னும் அப்ப்டியேதான் படுத்திருந்தாள். நான் சிகரெட்டை பற்றவைத்து புகையை மேலே விட்டேன்.

"ஓகே சொல்லிட்டேன்." என்றாள்.

நான் அவளைப் பார்த்தேன்.

"வீட்ல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. வேணுகோபால். டாக்டர்."

வாயிலிருந்த சிகரெட்டை வெளியே எடுத்தேன்.

"ஓகே சொல்லிட்டேன்."

நான் எழுந்தேன். அவளிடம் போய், அவள் முகத்தை பிடித்து, அவள் கண்களை நேராகாப் பார்த்தேன். என் பழைய நந்தினி கொஞ்சூண்டு தெரிந்தாள். நெற்றியில் முத்தமிட்டேன். என்னுடைய துணிகளை எடுத்து அணிய ஆரம்பித்தேன்.

"Is it a betrayal?" She said.

நான் திரும்பினேன். அவள் வலியுடன் புன்னைகைத்தாள்.

"I dont know!" I said.


*****

It really began in the days when the Love Laws were made. The laws that lay down who should be loved, and how.

And how much.

-Arundhati Roy in The God of Small Things.


*****

'The Making of தனிமையின் விலை' எழுதலாமா என்று யோசிக்கிறேன்.(Oops!) அதற்குமுன் இந்தக்கதை எழுத காரணமாக இருந்து அவ்வப்போது பல உதவிகள் செய்த திரட்டி.காம் நட்சத்திரம் பிரேம் அண்ணாவுக்கு நன்றிகள். :)

Federer all the way!


Finally, the years of waiting is over.

And how.

Federer displayed superb tennis of his class today at Roland Garros to win his 1st French Open title and 14th Grand Slam of his career.

Soderling, the man who stood in his way, said after the match, "I had the two best weeks of my career but to me Roger is the best player in history."

Oh yeah, those who were busy writing the so called 'End of Federer' has to eat their words, letter by letter, now. He is the greatest player EVER.

FEDERER BEATS SODERLING : 6-1 7-6 (7-1) 6-4.

Now, he is only the sixth man to complete career Grand Slams. Also, he is in level with Pete Sampras's record of 14 Grand Slam titles.

Go Roger!


EDITED TO UPLOAD VIDEO:




*****

BTW, I'M VERY HAPPY! :)

கனா கண்ட காலங்கள்

சம்மர் ஹாலிடேஸ் பத்தி, ஆகாயநதி அக்கா, என்னை எழுதச் சொல்லியிருந்தாங்க. நிறைய அழகான நினைவுகளை கிளறிவிட்ட இந்த பதிவை எழுதக் கூப்பிட்ட அவர்களுக்கு ரொம்பப் பெரிய நன்றி. :)

*****

இந்த முறை ஊருக்கு போயிருந்தபோது அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள், "சின்ன வயசிலிருந்தே என்னை விட்டு எங்கேயும் போக மாட்டான். சம்மர் லீவிலயும் வீட்டிலேதான் இருப்பான். ஆனா இப்ப சென்னைல தனியா கஷ்டப்படுறான்(?)."

இது ஒருவகையில் உணமைதான், நான் சம்மர் லீவில் ஓவராக ஆடியது எல்லாம் இல்லை. ஆனால் என் மாமா வீட்டுக்கு போவேன்.

அங்கே என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் இருந்தார்கள். என் மாமாவின், பொண்ணும் பையனும். ரெண்டு பேருமே என்னை விட பெரியவர்கள். அதனாலேயே நான் அவர்களுக்கு செல்லம். ரெண்டு பேரையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.

கிரிக்கெட் விளையாடி பழகியது ஞாபகம் வருகிறது. 7th லீவில் என்று நினைக்கிறேன். அப்போது பௌலிங் எல்லாம் போடத்தெரியாது. நின்ன இடத்தில் இருந்து ஒரு மாதிரி எறிந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்போதே சக்தி (என் மாமா பையன்) மலிங்கா மாதிரி, கையை விரித்து, பௌல் பண்ணுவான். சரின்னு நானும் ட்ரை பண்ணேன்.

ஓடிவந்து, குதித்து, பாலை ரிலீஸ் செய்ய கையை விரித்தால் ... பேலன்ஸ் மிஸ் ஆகி படுகேவலமாக கீழே விழுந்தேன். முகமெல்லாம் சிராய்ப்பு. மூக்கில் இருந்து ரத்தம் கொட்டி சட்டையெல்லாம் ரத்தம். கூட விளையாடிக் கொண்டிருந்த பையன்கள் சிலர் திடீரென்று மறைந்து விட்டார்கள்.

சக்திக்கு பயம். எனக்கு வலி அதிகமில்லையென்றாலும், பயத்தில் உடல் உதறியது. என்ன பண்ணோம் தெரியுமா? பைப்பில் தண்ணீர் பிடித்து சட்டையை துவைத்தோம். பிறகு காயவைத்து அணிந்து கொண்டு வீட்டுக்கு போணோம். :)

*****

அப்பொழுது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஹார்லிக்ஸை பாட்டிலில் இருந்து அப்படியே சாப்பிடுவேன்.

ஒரு முறை, சக்தி ஸ்டூல் போட்டு, மேலே இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்தான். எடுத்து, ஸ்டூலை விழாமல் பிடித்துக் கொண்டிருந்த என் மேல் போட்டுவிட்டான். வலி என்னவோ கொஞ்ச நேரத்தில் சரியாகிவிட்டது. ஆனால் ஆப்பிள் மாதிரி தலையில் வீங்கி விட்டது.

இதை மறைக்க, என்னை பாத்ரூமில் உடகார வைத்துவிட்டு வெளியே ஓடிப்போனான். கொஞ்ச நேரத்தில் ஒரு தொப்பியோடு திரும்பி வந்தான். ரெண்டு நாளுக்கு நான் அதை கழற்றவே இல்லை. :)

*****

மேலே சொல்லப்பட்ட கசப்பான அனுபவங்களால் சக்தி எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க மறுத்து விட்டான். மாட்டியது பிரியா.

சக்தி வராததாலோ என்னவோ சீக்கிரம் பழகிவிட்டேன். ரொம்பவும் ஈஸியாகத்தான் இருந்தது. ஓரிருமுறை விழுந்தாலும், அடிபடவில்லை. ரெண்டு நாளில் பழகிவிட்டேன். சக்தியை கிண்டல் செய்ய ஆரம்பித்தோம்.

அவன் சைக்கிளை கையை விட்டு ஓட்டிக் காட்டினான். சைக்கிள் சீக்கிரம் பழகிய தைரியத்தில், நானும் சைக்கிள் வேகமாக போகும்போது கையை விட்டேன். வாவ்!! சைக்கிள் கீழேவில்லை. போய்க்க்கொண்டே இருந்தது. என்னால் சந்தோஷ்ம் தாளவில்லை. கையை விட்டு ஓட்டினேன். நிஜமாவே கீழே விழலைங்க. சூப்பரா ஓட்டினேன்.

சைக்கிள் வேகமா போகும்போது கையை விட்டு, தலை முடியை பின்னால் தள்ளி விட்டிருக்கிறீர்களா? அட்டகாசமான ஃபீல் அது! :)

*****

இப்பொழுது பெரியவனாகி காலேஜில் எத்தனை ப்ரெண்ட்ஸ் இருந்தாலும், சின்ன வயசில் கூட விளையாடியவர்களை பார்க்கும்போது வரும் ஒரு ஃபீல் ஸ்பெஷல்தாங்க.

இந்த தொடர்பதிவை தொடரப்போகும் நல்லவர்கள்.

ஸ்ரீமதி, தமிழ்மாங்கனி, கார்க்கி, தாரணிப்பிரியா, மேவி, பிரேம்.