
நீ
பிரிந்து போன
ஒரு மழைநாளில் தான்
நான்
வர்ணங்களைத் தொலைத்த
வானவில் ஆனேன்.
ஆனால், ரெண்டு நாளை வீட்டுக்குள்ளேயே கழிக்க முடியுமா என்று கண்களை அகல விரிப்பவர்களுக்கு என் பதில், முடியும்.
*****
இது காலேஜ் ரீ ஓபனிங் டைம். ஸோ, நிறைய புது பசங்க காலேஜ் வருவாங்க. அவங்களுக்கு காலேஜ் பற்றி நிறைய சந்தேகங்கள், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால் ஃபேஸ்புக், ஆர்குட், மிங்கிள் பாக்ஸ், ... எல்லாவற்றிலும் அவங்க காலேஜின் குரூப்பில் சேர்ந்து, தன்னோட பல சந்தேகங்களையும், எதிர்பார்ப்புகளையும் சொல்லிட்டிருப்பாங்க.
அதையெல்லாம் படிக்கவே தமாஷாக இருக்கும். 'Proud to be a Loyolite', 'Proud to be an MCCian' என்று அவங்க அவங்க காலேஜ்க்கு ஏத்த மாதிரி சொல்லிட்டு இருப்பாங்க. நமக்குதானே தெரியும் காலேஜ் எப்படி இருக்கும்னு. ஸோ, படிக்க படிக்க செம காமெடியா இருக்கும்.
அப்புறம் சந்தேகங்கள். இதுவும் காமெடிதான்னாலும் இதுக்கு பொறுப்பா பதில் சொல்லத் தோணும்.
கேமரா செல்போன் வெச்சுக்கக்கூடாதா? (வெச்சுக்கலாம். ஆனால் வெளியே தெரியக் கூடாது.)
கேண்டீன்ல சாப்பாடு நல்லா இருக்குமா? (நல்லாதான் இருக்கும். பார்க்கிறதுக்கு.)
காலேஜ் ஸ்ட்ரிக்டாமே? (சேச்சே, ஜெயிலைவிட மோசமா இருக்காது.)
இது மட்டும் இல்லை. 'நான் நல்லா இன்ஸ்விங் போடுவேன். காலேஜ் கிரிக்கெட் டீம் எப்படி'ங்கிறதுல இருந்து 'நான் முடியை கலரிங் பண்ணிக்கலாம்னு இருக்கேன். ஒன்ணும் பிரச்சனையில்லையே'ங்கிறது வரைக்கும் நம்ம பசங்க கேட்கிற கேள்விகள் செம ஜாலியாக இருக்கும்.
ஆனால் ஒரு கேள்விக்கு ஒழுங்கா, பொறுப்பா பதில் சொல்லிப்பாருங்க. 10 நிமிஷத்தில் அஞ்சு ப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரும். ரொம்ப நல்ல பசங்க. போன வருஷம் நாமும் இதைத்தானே பண்ணினோம்.
அறிமுகப்படுத்திக்கிற பக்கத்தில் எவ்வளவு பசங்க(?) உங்க காலேஜ்ல சேர்ந்திருக்காங்கன்னு பார்த்துக்கலாம். ;)
*****
ஸோ, என்னோட போன வீக் என்ட் இப்படித்தான் வீட்டுக்குள் கழிந்தது. இப்போது வேலை பார்க்க வேண்டிய நேரம்.
See you guys!

*****
நம்ம லொள்ளு கார்த்திக் என்னை இந்தத் தொடர்பதிவின் இறுதிப்பாகத்தை படிக்க ஆவலாக இருப்பதாகச் சொல்லி எழுதச் சொன்னார். அவருக்கு நன்றி. இன்னொருவர் இந்தத் தொடர்பதிவை மறந்துவிட்டார். அவருக்கு _______. :)*****
திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தங்கள் என்னை அதிர்க்க, கண்களை திறக்க முயற்சி செய்தேன்.
என் பார்வை மங்கலாகாவும், என் நினைவுகள் நிலையற்றும் இருந்தாலும் என்னால் நடப்பதை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.*****
நியுயார்க்கில் எனது கடைசி நாள். பேக் செய்ய வேண்டியவை எல்லாம் பேக் செய்யப்பட்டுவிட்டது. நந்தினியுடன் எனது கடைசி நாள்.என்ன செய்திருக்கிறேன்? இது என் மனைவிக்கு துரோகமா? நான் நல்லவன் என்றே எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். இப்போது?
நந்தினி இன்னும் அப்ப்டியேதான் படுத்திருந்தாள். நான் சிகரெட்டை பற்றவைத்து புகையை மேலே விட்டேன்.
நான் அவளைப் பார்த்தேன்.
வாயிலிருந்த சிகரெட்டை வெளியே எடுத்தேன்.
நான் எழுந்தேன். அவளிடம் போய், அவள் முகத்தை பிடித்து, அவள் கண்களை நேராகாப் பார்த்தேன். என் பழைய நந்தினி கொஞ்சூண்டு தெரிந்தாள். நெற்றியில் முத்தமிட்டேன். என்னுடைய துணிகளை எடுத்து அணிய ஆரம்பித்தேன்.
நான் திரும்பினேன். அவள் வலியுடன் புன்னைகைத்தாள்.
It really began in the days when the Love Laws were made. The laws that lay down who should be loved, and how.
-Arundhati Roy in The God of Small Things.
*****
'The Making of தனிமையின் விலை' எழுதலாமா என்று யோசிக்கிறேன்.(Oops!) அதற்குமுன் இந்தக்கதை எழுத காரணமாக இருந்து அவ்வப்போது பல உதவிகள் செய்த திரட்டி.காம் நட்சத்திரம் பிரேம் அண்ணாவுக்கு நன்றிகள். :)

வானவில் வீதி Copyright © 2008 Free Wordpress Themes. Sponsored by Sample ResumeBunk Beds511 tactical Pants. Bloggerized by Girly Blogger