தேவதையும், பிடித்த பிடிக்காதவர்களும்

தாரணிபிரியா அக்கா ஒரு தேவதை அனுப்பி பத்து வரம் வாங்கிக்க சொல்லியிருந்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டேன்.

வரம் கேட்பதல்ல பிரச்சனை. ஐபோன் கேட்கலாம். ஐஐஎம்மில் ஒரு சீட் கேட்கலாம். ஐரோப்பாவில் (யூரோப்தான்பா!) ஒரு டூயட் கேட்கலாம். ஐன்ஸ்டைன் மாதிரி கிட்னி(!) கூட கேட்கலாம். பொயட்டிக்கா இல்லையே!

பார்த்தால் எதோ டிவியில் தல ஒரு பெரிய லிஸ்டே போட்டுக் கொண்டிருந்தார். இதிலிருந்து தேவதைக்கு பிடித்த 10 வரங்களை கேட்டுக் கொள்கிறேன். :)





தொடரை தொடர அழைக்கப்படுபவர்கள்

ஸ்ரீமதி

பப்பு

கார்க்கி

தமிழ்மாங்கனி

*****



அடுத்து பிடித்த பிடிக்காத 10 விஷயங்களை பட்டியலிட வேண்டும். அருணா மேம் கூப்பிட்டிருக்கிறார்கள்.

பிடிக்கும் பிடிக்காது என்று கருப்பு வெள்ளையில் பதில் சொல்வது எனக்கு கஷ்டம். முழுசா பிடிச்சது, முழுசா பிடிக்காதது என்று இருப்பவை மிகக் குறைவு. அவற்றை பகிர்ந்து கொள்ளவும் முடியாது. ;)

பார்க்கலாம்..

எழுத்தாளர்

பிடித்தது : சுஜாதா - கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகள்.

பிடிக்காதது : சாரு நிவேதிதா - வலையில் மட்டும்தான் படித்திருக்கிறேன். அவற்றில் சில பிடிக்கவில்லை.

கவிஞர்

பிடித்தது : முகுந்த் நாகராஜன் - அகி, வலையில் படித்தவை.


பிடிக்காதது : தபு சங்கர் - வார இதழ்களில் மட்டும் படித்திருக்கிறேன். காதலாகி கசிந்துருகுவதால்.

பாடலாசிரியர்

பிடித்தது : செல்வராகவன் - 'மாலை நேரம் மழை தூறும் நேரம்' என்ற ஒற்றை பாட்டுக்காக.

பிடிக்காதது - கதாநாயகர்களுக்கு பிரச்சார பாடல் எழுதும் எல்லோரும்.

இசையமைப்பாளர்

பிடித்தது - பழைய இளையராஜா, பழைய ரஹ்மான் (தமிழ்), புது ரஹ்மான் (ஹிந்தி)

பிடிக்காதது - விஜய் ஆண்டனி - இவருக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைக்க வேண்டும்.

இயக்குனர்

பிடித்தது : மணிரத்னம் - தமிழில் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த படங்கள் தருவதால்.

பிடிக்காதது : ஷங்கர் - சிவாஜி என்ற ஒற்றை படம்.

நடிகர்

பிடித்தது : தனுஷ் - செல்வராகவன் படங்கள் அளிக்கும் நம்பிக்கையில்..

பிடிக்காதது : 120 ரூபாய் கொடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே முதலமைச்சர் கனவோடு பிரச்சார பாடல் பாடுபவர்.

நடிகை

பிடித்தது : ஷாலினி - அலைபாயுதே

பிடிக்காதது - லூஸுத்தனமாக வந்து டார்ச்சர் பண்ணிப் போகும் எல்லோரும்.

ஆர்.ஜே

பிடித்தது : அஜய், ரேடியோ மிர்ச்சி - காலங்கார்த்தால கூவி எழுப்பி விடுவதால். ;)

பிடிக்காதது : சிவசங்கரி @ டாக்டர்.லவ், அதே ரேடியோ மிர்ச்சி - அர்த்த ராத்திரியிலும் தூங்க விடாமல் மொக்கை போடுவதால். :P

அரசியல்வாதி

பிடித்தது : ஸ்டாலின் - ஒரு நம்பிக்கைதான். ஒபாமாவுக்கு நோபலே கொடுக்கிறார்கள், நம்பிக்கையில்.

பிடிக்காதது : கருணாநிதி - காரணம் ஆயிரம்.

பதிவர்

பிடித்தது : இந்த வரியுடன் பின்னூட்டம் போட செல்பவர்கள். :)

பிடிக்காதது : பட்டியலில் பத்து இருக்கா என்று எண்ணுபவர்கள். :P

--

தொடரை தொடர அழைக்கப்படுபவர்கள்

திவ்யபிரியா

கார்த்திகை பாண்டியன்

ஆனந்த்

இரா.வசந்தகுமார்.

*****

செமஸ்டர் இன்னும் இரண்டு பேப்பர் பாக்கி இருக்கிறது. ஜூட்..

தீபாவளி.. ஹோய்.. தீபாவளி

பதிவின் தலைப்பு ஒரு பிரபல கவிஞரின் ஸ்டேட்டஸ் மெஸேஜ் என்று அறிக.

--

சென்ற பதிவில்.. பதிவு எழுத மேட்டரே கிடைப்பதில்லை என்று எழுதியிருந்தேன். கார்த்திகைப் பாண்டியன் அண்ணாவும், ஸ்ரீமதியும் (அக்கானெல்லாம் சொல்லிப் பழக்கமில்ல) ஒரு தொடர்பதிவில் மாட்டிவிட்டு புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நல்லா இருங்க.. :)






Here we go...

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

Insanity Personified னு ப்ரொபைல்ல தெளிவா சொல்லியிருக்கேன். என்ன பண்றேன்னா, சென்னைல படிச்சிட்டு இருக்கேன்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

நிறைய இருக்கே, இந்த வருஷ தீபாவளி கூட மறக்க முடியாததுதான். ஊருக்கு போகாததால் என் ஃப்ரண்ட் ஒருத்தன் வீட்டில் கொண்டாடினேன்.

நானும், அவனும் எங்க தீபாவளி ட்ரஸ்ஸை யாருக்கும் காட்டாம சர்ப்ரைஸா வெச்சிருந்தோம். தீபாவளியன்னிக்கு காலைல, ரூமைத் திறந்துகிட்டு நானும் அவனும் வேட்டி சட்டையில் வந்தபோது எல்லோருக்கும் ஹார்ட் அட்டாக்! :)

கோவிலுக்கு போனபோது எல்லோரும் எங்களையே பார்த்தாங்க தெரியுமா? :))

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

சென்னைலதான்..

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

அம்மா, அப்பா, தங்கை எல்லோரையும் மிஸ் பண்ணேன். மத்தபடி ரொம்ப நல்லாருக்கு..

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

ப்ச், கடை பேர் ஞாபகம் வரலியே! என் ப்ரண்ட் சொன்னேன்ல, அவன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது. வேட்டி, சட்டை ரெண்டுமே ரெடிமேட். :)


உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

நான் தீபாவளி கொண்டாடிய என் நண்பன் வீட்டில் எதுவும் செய்யவில்லை. எல்லாம் கடைல வாங்கினதுதான். என் வீட்டிலும் அதிகம் கடைல தான் வாங்கறாங்க. அம்மா அவங்களோட ட்ரேட்மார்க் கேசரி மட்டும் செஞ்சிருப்பாங்க..


உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

உறவினர்களெல்லாம் அதிகம் இல்லை. போன் பண்ணுவாங்க, அப்பவே நானும் சொல்லிடுவேன். நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ், சிலருக்கு மின்னஞ்சல்.

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

வீட்டில் இருந்தபோது மதியத்திற்கு பிறகு டிவிதான், இரவுவரை. இங்க சென்னைல.. நிறைய வீட்டுக்கு விசிட் பண்ணி ஓசி ஸ்வீட் சாப்பிடறதுக்கே நேரம் போயிர்றது. :)

இந்த வருஷம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒண்ணும் பார்க்கல.

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

எனக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் ஞாபகம் வருது.

போனவருஷம் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தபோது கிண்டிலதான் வாசம். ஒருநாள் சனிக்கிழமை காலை (முற்பகல்னும் சொல்லுவாங்க.. :P) தூங்கிட்டிருந்தபோது கதவை யாரோ தட்டினாங்க. தூங்கிக்கிட்டே போய் திறந்தா, ஒரு சின்னப் பொண்ணு. வயசு 15 தான் இருக்குமோ என்னவோ. ஒரு கையில் நோட்டீஸ் ஒண்ணு, இன்னொரு கையில் ரசீது புத்தகம். ஏதோ அனாதை இல்லம்.

தூங்கிக்கிட்டே திரும்ப ரூமுக்குள் வந்து ஆஞ்சநேயர் படத்துக்கு கீழிருந்த 20 ரூபாயை கொண்டு போய் கொடுத்தேன். அந்த பொண்ணு நீட்டிய ரசீது புத்தகத்தையெல்லாம் பார்க்க முடியல, திரும்ப வந்து தூங்கிட்டேன். நான் செஞ்ச ஒரே உதவி (?) இதான் (தூக்கக் கலக்கத்தில், சுயநினைவு இல்லாமல்). :(

செய்யணும்..


நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

பிரேம்குமார் (அந்த பிரபல கவிஞர் இவர்தான்)

காதம்பரி ஸ்வாமினாதன்

கனகு

முகுந்தன்

--

பி.கு 1 : தாரணிபிரியா அனுப்பிய தேவதை தொடர்பதிவுதான் அடுத்து. என்ன வரம் கேக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

பி.கு 2 : கனகு, அமித்து அம்மா, ஸ்ரீமதி எல்லாம் விருது கொடுத்திருக்காங்க. நன்றிகள். சீக்கிரம் பகிர்ந்துக்கிறேன்.

பி.கு 3: செமஸ்டர் வந்துவிட்டதால் கொஞ்சம் பிஸி. படிக்க வேண்டியிருக்கு. :)

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - ஸ்ரீ ரங்கம்

தலைப்பு உதவி : பேயாழ்வார் :)

--




பிரியா போனில் பேசிக் கொண்டிருக்க, நான் ஸ்ரீமதியின் ரிப்ளை மெஸேஜை படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் முன் நின்றிருந்தோம். சென்ற வார ஞாயிறு. காலை.

'என்ன ஐன்ஸ்டைன், உன் ஃப்ரண்ட் ரிப்ளை பண்ணாங்களா?' பிரியா கேட்டாள்.

'ம்ம்.. பண்ணாங்க. நீ முடிச்சிட்டியா?'

'ம்ம்..''

உள்ளே நடந்தோம். பிரியா பற்றி உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். என் மாமா பெண். டெல்லியில் வேலை பார்க்கும் பெரிய மனுஷி. Almost a genius.

தீபாவளிக்கு பிந்தைய லீவில் ஊருக்கு போயிருந்தபோது, வந்திருந்தாள். ஒருவாரம் ஆட்டம் போட்டுவிட்டு அவள் டெல்லியும், நான் சென்னையும் திரும்பும் முன் ஸ்ரீரங்கம்.

செருப்புகளை விட வேண்டிய நேரம். இங்கேயே வரிசையில் நிற்க வேண்டியிருந்தது எனக்குள் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கவிட்டது. விட்டுவிட்டு உள்ளே நுழைந்தோம்.


ஸ்ரீரங்கம் என்னுடைய ஃபேவரைட் என்பது இந்த பிளாகை தொடர்ந்து வாசிக்கும் புண்ணியாத்மாக்களுக்கு தெரியும். காரணங்கள் பர்ஸனல். 

மேலும், காவிரி, கொள்ளிடம் என்ற இரு ஆறுகளால் சூழப்பட்ட மிகவும் பழைய, பெரிய, அழகிய கோவில். ராமாவதார காலத்தது என்று கதைகள் சொல்கின்றன. 108 திவ்யதேசங்களில் முதன்மையானது. பத்து ஆழ்வார்களும் பாடிய (ஒரே?) தலம். பூலோக வைகுண்டம் எனப்படுவது. ராமானுஜர் மோக்ஷம் அடைந்தது. கம்பர் ராமாயணம் அரங்கேற்றியது. ...

கோவிலுக்குள் கூட்டம் அள்ளியது. ஸ்ரீரங்கநாதர் செம பிஸி. வரிசையை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த ஒரு அண்ணா உதவியால் 50 ரூ வரிசையில் போய் நின்றோம். சன்னதியை அடைகையில் என் தாடி வளர்ந்துவிட்டது.

பெரிய சன்னதிக்குள் கால் வைப்பது, என்னைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக வேறோர் பிரபஞ்சத்திற்குள் நுழைந்துவிடுவதைப் போன்றது. சுற்றியிருக்கும் உலகம் சட்டென்று காணாமல் போக. அரங்கன் அவா அறச்சூழும் பரவசம். சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

தாயார் சன்னதியில் காத்திருப்புகள் போன்ற கஷ்டங்கள் இல்லை.அதே பரவசம். வழக்கம்போல் என் வேண்டுதல்கள் எல்லாம் இங்கேதான். புன்னகையுடன் என் Wish list ஐ கேட்டுக் கொண்டார்கள். She is a true mother!

ஆண்டாள் சன்னதிக்கு வெளியே, ஒரு வட இந்திய குடும்பத்திற்கு ஆண்டாள் பற்றி பிரியா விளக்கினாள். என் அரைகுறை இந்தி என்னை படம் போட அனுமதிக்கவில்லை என்பது ஒரு சோகம். தன்வந்திரி, உடையவர், சக்கரத்தாழ்வார், பிரம்மாண்டமான கருடாழ்வார் சன்னதிகளை தரிசித்து முடிக்கையில் எனக்கு பசி. கோவில் பிரசாதம் சுமாராக இருந்தது.

யானையை வேடிக்கை பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் துரதிர்ஷ்டசாலிகள். அவர்கள் உள்ளே போக முடியாது. சாப்பிடும்போது, என் பிளாக்கை பற்றி சொல்லிவிடலாம் என்று தைரியம் வந்து பிரியாவிடம் கேட்டேன்.

'பிரியா, இந்த ப்ளாக்ஸ் எல்லாம் இருக்கில்ல.. நீ எழுதுறியா?'

கேட்டிருக்கக் கூடாது. கார்பரேட் ப்ளாக்கிங், PR என்று கதை சொல்ல ஆரம்பித்தாள். இந்த ஞான சூன்யத்திடம் பேசுவது வேஸ்ட் என்று கம்மென்று இருந்துவிட்டேன். :)

பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தோம். சென்னைக்கு சற்றும் குறைந்ததல்ல திருச்சி வெயில் என்று புரிந்தது. இதற்கிடையில் பிரியாவின் டெல்லி புராணத்தை வேறு சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஸப்பா!


TBS பஸ் ஏறி பஸ் ஸ்டாண்ட்டை அடைந்தோம். சென்னைக்கு 275 ரூபாய். ஏறி அமர்ந்தேன். பிரியா யாரோ ஃப்ரண்டை பார்க்க போகிறாள்.

'Bye பிரியா' என்றேன்.

'Bye ஐன்ஸ்டைன்' என்றாள்.

என் பக்கத்து சீட் காரர் என்னை அதிர்ந்துபோய் பார்த்தார்.



--

ஒரே வருஷத்தில் ஸ்ரீரங்கம் பற்றி ரெண்டு பதிவா என்று அழுவது கேட்கிறது. வாரம் ஒரு பதிவு போடலாம்னா கூட மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. What to do? :)

காஃபி வித் கார்க்கி!




'கார்த்திக் எங்க இருக்க?'

'ரயில்வே ஸ்டேஷன்லதான்.. நீங்க?'

'ரேஸ் கோர்ஸ் ஆப்பொஸிட்ல ஒரு ஆவின் இருக்கு தெரியுமா.. அங்க..'

'அங்கேயே இருங்க வரேன்'

--

தீபாவளிக்கு முந்தைய நாள் கார்க்கியை மீட் பண்ணேன்.

கார்க்கி தீபாவளி அன்றுதான் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். ஆனால் அதற்கு முந்தைய நாள் கிண்டியில் எனக்கு ஒரு சின்ன வேலை இருந்ததால் அன்றே 'நம் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா' என்று கேட்டேன். சரி என்றார்.

இதோ கிண்டி வந்துவிட்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஆவின் பாலகத்தை நோக்குகையில் கார்க்கி நின்றிருந்தார். பச்சை டி ஷர்ட், ஷார்ட்ஸ், தலையில் கேப்.. 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என்றெல்லாம் பாடாமல் ஆதம்பாக்கம் விரைந்தோம்.

--

கார்க்கி எனக்கு பதிவுலகில் முதலில் கிடைத்த நண்பர்களில் ஒருவர். ஆனால் முதலில் ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டோம் என்பது ஒரு ஆச்சர்யம்.. ரெண்டு நாளில் தமிழ் சினிமா மாதிரி சமாதானமாகி, பிறகு ஃப்ரண்ட்ஸ் ஆனோம் (முஸ்தஃபா.. முஸ்தஃபா!).

ஒரு வருஷமா ப்ளாக் படிக்கிறோம். அவ்வப்போது சாட்டிலும், போனிலும் பேசுகிறோம் என்றாலும் மீட் பண்ணியதில்லை. சிறுகதைப் பட்டறையின் போதுதான் கார்க்கியை நேரில் பார்த்தேன். அன்றும் அதிக நேரம் பேச முடியவில்லை. ஹிஸ்டரி போதும்!

--

கார்க்கியின் வீட்டை அடைந்தோம். ரொம்ப அழகான வீடு, அமைதியாகவும் இருந்தது.

நானும் கார்க்கியும் அவ்ளோ சீரியஸ் பீஸுங்க கிடையாது என்றாலும் பேசும்போதெல்லாம் நோ-நான்சென்ஸாதான் பேசிப்போம். நேரிலும் அதுதான் நடந்தது.

மாஸா ஜூஸோடு, வேலை படிப்பு குடும்பம் என்ற சொந்தக் கதைகள், பதிவுலகம், சினிமா, சுஜாதா, இலக்கியம் (!) என்று வாய்க்கு கிடைத்ததை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். கார்க்கி அம்மா தட்டு நிறைய ஸ்வீட்ஸ் கொண்டு வந்து வைத்தார்கள்.

கார்க்கி அம்மா நான் நினைத்தது போலவே இருந்தார்கள். அன்பாக பேசினார்கள். தட்டில் இருந்த ஸ்னாக்ஸின் அளவைப் பார்த்ததும், ஒரு வாரம் இங்கே இருந்தால் என் நீண்டகால ஆசையான வெயிட் போடுதல் சாத்தியம் என்று தோன்றியது. நன்றிகள். :)


வீட்டை ஒரு ரவுண்ட் விட்டபோது தன் ஸ்டடியில் இருந்து ரெண்டு புக்ஸை உருவிக் கொடுத்தார், ஆட்டோகிராஃப் போட்டு. ஒரு சிட்னி ஷெல்டன் நாவல் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் பயாக்ரபி.


கார்க்கியை இந்த வீட்டுக்குள் விடுவதால்தான் கார்க்கி வீடு என்று நம்ப முடிகிறது. :P


This guy practically lives in hyderabad and has all of his things over there.


கார்க்கியுடன் பேசிக் கொண்டிருக்கையில் காலம் ரிலேட்டிவ் என்பது ஈஸியாக புரிந்தது. என் நண்பன் போனில் அனத்த ஆரம்பித்தான். ஒரு 'பெரிய ஃப்ரண்ட்' வீட்டில் இருப்பதாக சொல்லி வைத்தேன்.

கீழே வந்து மணியைப் பார்த்தபின் தான் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. கார்க்கி அம்மாவின் அருமையான காபி ஒன்றை குடித்துவிட்டு கிளம்பினோம்.


ரேஸ்கோர்ஸ் ரோடில் திரும்பி வரும்போது, மனசில் செப்பியா டோனில் ஒரு ப்ளாஷ்பேக் ஓடியது. போன வருஷம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கையில் ஒரு ஆறுமாதம் இங்கேதான் தங்கியிருந்தேன்.

--

ரேஸ்கோர்ஸ் ரோடு, ரேஸ்கோர்ஸ் அவென்யு, அங்கே இருக்கும் ஒரு பெருமாள் கோவில், ஈழத்தமிழர்களுக்காக எல்லோரும் சாப்பாட்டு கடையை அடைத்து உணர்வை காட்டிக் கொண்டிருக்கையில் உணவுக்காக அலைந்த வீதிகள்..

பாதியில் நின்றிருந்த பாலம் (அப்போது), அதில் கழிந்த ஒருபாதி ராத்திரி, அன்று நான் முயன்ற சிகரெட், உயிரை பணயம் வைத்த தண்டவாள நடைகள், டின்னருக்கு பின் சாப்பிட்ட வாழைப்பழங்கள்..

ஜாவா - மாடுல் - க்ளைண்ட் -  எம்சிஏ - பேக்கப் - ப்ராஜெக்ட் - ... என்று ஐடி பாஷைகளூடே குடியிருந்த ரூம், சின்னப்பையனான என்னை சகித்துக் கொண்ட ரூம்மேட்ஸ், ஹிண்டுவா டெக்கன் க்ரானிக்கலா என்று தொடங்கிய விவாதம் சண்டையான அதிர்ச்சி, அதை வேடிக்கை பார்த்த கையாலாகாதனம்..

ஒரே நாள் ராத்திரி எல்லோரும் காலி செய்ய, பெட்டியை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு ஹாஸ்டலில் சரணடைந்த ஞாபகங்கள்..

கிண்டியை மறக்கவே முடியாது.

--

திரும்ப ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். பைக்கை ஓடவிட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக காமன்சென்ஸ் திரும்ப வர Bye சொல்லிக் கிளம்பினோம்.

Thanks Karki, i missed my home a bit less on Diwali!


***

டிஸ்கி 1 : ஸோ வாட் என்று கேட்காதீர்கள். :)

டிஸ்கி 2 : டெம்ப்ளேட் மறுபடி மாத்தியிருக்கேன். எப்படி இருக்கு என்று சொல்லவும். ப்ளீஸ்!

ரெயின்போ தாட்ஸ் - 12 Oct 2009

ஒரு நூலகம் என்பது கருத்தோட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள திறந்து விடப்படும் சாளரங்கள்.
பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரரி போனால் காம்பௌண்ட் சுவரில் எழுதியிருக்கிறார்கள். யார் சொல்லியிருக்கக்கூடும் என்று யோசியுங்கள். க்ளூவெல்லாம் பொன்மொழியிலேயே இருக்கிறது.

~

ரொம்ப நாட்களுக்கு பிறகு இஸ்பஹானி பக்கம் போயிருந்தேன். இந்த செமஸ்டரில் இது ரெண்டாவது முறைதான் என்று நினைக்கிறேன். அடிக்கடி அந்த வழியாக போனாலும் இஸ்பஹானியில் ஒரு பிஸ்னஸும் இருப்பதில்லை. மேலும் ஸ்பென்ஸரும், சிட்டி சென்டரும் செலவழிக்க சிறந்த இடங்கள் (நேரத்தைதான்). ஆனால் ஒரு விஷயத்தில் இஸ்பஹானியை அடிச்சிக்கவே முடியாது.

இந்த வருஷம் எம்.ஓ.பியில் சேர 'Candidate must look Great' என்றொரு க்ரிட்டீரியா இருந்திருக்க வேண்டும். :)

~



இந்த வருஷம் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் சற்று ஆச்சர்யப்படுத்தின என்றாலும் மிகவும் பொருத்தமானவையே. இண்டர்னெட்டின் 40வது வருஷத்தில், அதன் வளர்ச்சிக்கு வழியமைத்த இரண்டு (சற்றே பழைய) ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற்து. வழக்கம்போல் அமெரிக்கர்கள்.

முதலில் சார்லஸ் காவ்...

கண்ணாடி இழைகளில் ஒளி வடிவில் தகவல்களை அனுப்புவது 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் (Salad days?) ஏற்பட்ட முன்னேற்றம். ஆனால் இந்த தகவல் பரிமாற்றம் ஆராய்ச்சிசாலைகளில் ஒரு சில மீட்டர்கள் தொலைவுக்குள் மட்டும் நடந்து கொண்டிருந்தது.

அதிக தொலைவிற்கு அனுப்பும்போது கண்ணாடி இழைகளில் ஒளி சிதறடிக்கப்பட்டதால் தகவல் இழப்பு ஏற்பட்டது. 1960ல் இதற்கான காரணத்தை ஆராய்ந்த சார்லஸ் காவ், கண்ணாடி இழைகளில் இருந்த மாசுக்களை (Impurities) கண்டறிந்தார். இந்த ஆராய்ச்சி பிறகு மாசற்ற (almost) கண்ணாடி இழைகளின் தயாரிப்பிற்கு வழியமைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நீண்டதூர தகவல் பரிமாற்றம் சாத்தியமானது.

இன்று உலகம் முழுவதையும் கடலுக்கடியில் கண்ணாடி இழைக் கேபிள்களால் இணைத்து சுருக்கியிருக்கிறோம்.

அடுத்து வில்லார்ட் பாய்ல் மற்றும் ஜார்ஜ் ஸ்மித்...

இவர்களின் கண்டுபிடிப்பான சிசிடி(Charge Coupled Device), படங்களை டிஜிட்டலில் சேமிக்க உதவியதன் மூலம் டிஜிட்டல் கேமரா பிறக்க வழிசெய்தது. இந்த சிசிடி ஹப்பிள் தொலைநோக்கி போன்ற உயர்மட்ட இயற்பியல் கருவிகளிலும் பயன்படுகிறது.

சிசிடியில் இருக்கும் சிலிக்கன் பகுதியின்மேல் ஒளி விழும்போது (அதற்கேற்ற) மின்னூட்டம் (Charge) உற்பத்தியாகிறது. இந்த மின்னூட்டம் கெப்பாசிட்டர் அடுக்களால் சேகரிக்கப்பட்டு ஆம்ப்ளிபையருக்கு அனுப்பப்பட்டு டிஜிட்டல் சிக்னலாக மாற்றப்படுகிறது. படமானது டிஜிட்டல் சிக்னலாக மாற்றப்பட்ட பிறகு சேமிப்பதும், பரிமாற்றம் செய்வதும் எளிமையாகிறது.

புகைப்படங்களை ஃபிலிமில் சேமித்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தை நினைத்துப் பாருங்கள். இன்று செல்போனில் குறும்படங்கள் எடுத்து அதை உலகின் அடுத்த மூலைக்கு நொடியில் அனுப்புகிறோம்.

~

ரெயின்போ ட்வீட்ஸ்...

டிவியில் முதல்வன் படம் பார்த்தேன். ரஜினி நடித்திருக்க வேண்டிய படம் என்பதில் சந்தேகமில்லை. சில விஷயங்களை சிலர் செய்தால்தான் ரசிக்கமுடியும்.

நாஸா விஞ்ஞானிகள் நிலாவில் ஒரு வீணாபோன சாட்டிலைட்டை அசுர வேகத்தில் (8000 km per hour) மோதியதை பார்த்தீர்களோ? தண்ணி இருக்கானு தேடுறங்களாம். முடிந்தால் அடுத்த ரெயின்போதாட்ஸில் எழுதுகிறேன். அதிகம் சயின்ஸ் எழுதி போரடிக்கிறேனா?

ஒபாமாவின் நோபல் பரிசு ஒரு பெரிய சுமையாக இருக்கப் போகிறது. அவர் எடுக்க வேண்டிய பல முடிவுகளில் குறுக்கிடக்கூடும். உலகப் போலீஸ்காரனாகவும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பது கஷ்டம்!

லேண்ட்மார்க்கில் Best Buy என்று புத்தகங்களை தள்ளுபடியில் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டப்பா புக்ஸ் மட்டுமல்ல டாப்பான புக்ஸுக்கும்தான்.

சேதன் பகத்தின் 2 States வெளிவந்துவிட்டது. லேண்ட்மார்க்கில் குவித்து வைத்திருந்தார்கள். யாராவது படித்துவிட்டு ரெகமென்ட் பண்ணினால் வாங்கலாம் என்றிருக்கிறேன். அவரின் கடைசி நாவல் மிகப்பெரிய Let Down.
தீபாவளிக்கு ஊருக்கு போவதில்லை என்று முடிவு செய்தாகிவிட்டது. வேட்டைக்காரன் ரிலீஸாகவில்லை என்பதால் படம் பார்க்கும் ஐடியாவும் இல்லை(:P). இனிப்பு அனுப்ப விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும். ;)
~
மேற்கண்ட பொன்மொழியை சொன்னது கார்க்கியாம்.. :)